Sep 29, 2015

உனக்கென்று சில மணித்துளிகள்

பயம் என்னும் திரையை விலக்கலாம்
ஓடுதலின் வேகத்தை குறைக்கலாம்

பூக்களின் வாசத்தை நுகர
அணில்களின் செல்ல சிணுங்களை ரசிக்க
தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணியை எண்ண
மழைத்தூறலின் தாளத்தை கேட்க
உன் மூச்சின் ஏற்ற இறக்கங்களை உணர  
நேரத்தை கொஞ்சம் ஒத்திவைக்க

கைபேசியின் கூவல்கள் காத்திருக்கட்டும்
முகநூலின் தகவல் ரேகைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும்
வாழ்க்கை ஓட்டம் ஆமையாக சில மணித்துளிகள் மாறட்டும்

கண்கள் நோக்கி முழுமையாக உள்வாங்கும்
உரையாடல்கள் வேண்டும்
காதுகள் கவனமாக கேட்கும்
பொறுமைகள் வேண்டும்

எதுவும் உன்னை விட்டு போய்விடாது
உனக்கென்று சில மணித்துளிகள் ஒதுக்கினால்

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.